Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஹ்ரைனில் இலக்கியத் திருவிழா

நவம்பர் 13, 2023 01:34

மனாமா: பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் 
இலக்கியத் திருவிழா தொடங்கியது. 

இந்த திருவிழாவை இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் தொடங்கி வைத்தார். 

அதன் பின்னர் இலக்கியத் திருவிழாவில் இடம் பெற்றுள்ள ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்களை பார்வையிட்டார்.

இந்த திருவிழாவையொட்டி கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், கலைக் கண்காட்சி, வினாடி வினா, கதை சொல்லும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இந்த தொடக்க விழாவில் பஹ்ரைன் அரசு கலாச்சாரத்துறை அதிகாரி ஹுதா சையித் அப்துல் கபார் அல் அலவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்